காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் அதிரடி; 5 பயங்கரவாதிகள் உட்பட 13 பேர் கைது
காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் அதிரடி; 5 பயங்கரவாதிகள் உட்பட 13 பேர் கைது
ADDED : ஆக 28, 2026 06:37 AM

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி நடவடிக்கையில் 5 பயங்கரவாதிகள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் அமைதியைக் குலைப்பதற்கான முயற்சிகள் உள்ளிட்ட சதி செயல்களை செய்ய பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கைகளை பாதுகாப்புப் படைகள் தீவிரப்படுத்தி உள்ளன.
ஜம்மு காஷ்மீர் போலீசார், இந்திய ராணுவம் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படைகள் நடத்திய அதிரடி நடவடிக்கையின் போது, 5 பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதி கூட்டாளிகள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். பாரமுல்லாவில் உள்ள ஷோபியான், புல்வாமா, சோபோர் மற்றும் குல்காம் மாவட்டங்களில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடவடிக்கைகளின் போது, பாதுகாப்புப் படைகள் பெருமளவிலான ஆயுதங்கள், வெடிமருந்துகள், கையெறி குண்டுகள் மற்றும் தேசவிரோத ஆவணங்கள் மற்றும் சுவரொட்டிகளையும் மீட்டெடுத்தன. காஷ்மீர் முழுவதும் உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
