ADDED : மார் 27, 2025 08:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானா: கால்வாயில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழந்தார்.
பவானாவில் உள்ள கால்வாயில் இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கியதாக போலீசாருக்கு நேற்று காலை 7:15 மணிக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினருடன் போலீசார் விரைந்தனர்.
மீட்புப்படையினர் ஒரு சிறுவனை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மற்றொரு 13 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.
இருவரும் சகோதரர்கள் என்பதும் கால்வாய் நீரில் விளையாடிக் கொண்டிருந்தபோது, இந்த துயரச்சம்பவம் நேரிட்டதும் தெரிய வந்தது.
இறந்த சிறுவனின் சடலம், பிரேத பரிசோதனைக்காக பி.எஸ்.ஏ., மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.