ADDED : மார் 25, 2024 10:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உஜ்ஜயினி: மத்திய பிரதேசம் உஜ்ஜயினியில் மகாகாளேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சிவன், தெற்கு நோக்கியபடி தட்சிணாமூர்த்தி அம்சத்துடன் இருக்கிறார். பிரசித்திப் பெற்ற இந்த கோயிலில் இன்று (மார்ச் 25) காலை கருவறையில் சாமிக்கு பூஜைகள் நடந்துவந்தன. இதற்காக காலையிலேயே பக்தர்கள் பெருமளவு குவிந்தனர். இக்கோயிலில் இன்று அதிகாலை ஹோலி பண்டிகையும் கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து பஸ்ம ஆரத்தி எடுத்தபோது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆரத்தி எடுத்த கோயில் பூசாரி சஞ்சய் குரு மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட 13 பேர் லேசான காயமடைந்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டது. ஹோலி கொண்டாட்டத்தின்போது தீப்பற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது. இது பற்றி விசாரணை நடந்து வருவதாக மாவட்ட கலெக்டர் நீரஜ் குமார் சிங் தெரிவித்தார்.

