sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கர்நாடகாவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்: 2 பேர் கைது; 4 பேர் ஓட்டம்

/

கர்நாடகாவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்: 2 பேர் கைது; 4 பேர் ஓட்டம்

கர்நாடகாவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்: 2 பேர் கைது; 4 பேர் ஓட்டம்

கர்நாடகாவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்: 2 பேர் கைது; 4 பேர் ஓட்டம்

11


ADDED : ஜூன் 01, 2025 05:08 PM

Google News

ADDED : ஜூன் 01, 2025 05:08 PM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி: 15 வயது சிறுமியை இரண்டு முறை கூட்டு பலாத்காரம் செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: பாதிக்கப்பட்ட சிறுமி கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர். அவரது நண்பர் ஒருவர், ஆசை வார்த்தை கூறி மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர், 5 நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தனர். இதனை, அவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர். தொடர்ந்து, இந்த வீடியோவை ஆன்லைனில் வெளியிடப் போவதாக சிறுமியை மிரட்டி வந்தனர்.

இவ்வாறு மிரட்டி அந்தச்சிறுமியை மீண்டும் 6 பேர் கும்பல் இரண்டாவது முறையாக கூட்டு பலாத்காரம் செய்தனர்.பிறகும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து பயந்து போன அந்தச்சிறுமி போலீசில் புகார் அளித்தார்.இதன் அடிப்படையில் போக்சோ மற்றும் பிஎன்எஸ் ஆகிய சட்டங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இரண்டு பேரை கைது செய்தனர். இதனையறிந்த நான்கு பேர் தலைமறைவாகினர். அவர்களை தேடி வருவதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us