sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சத்தீஸ்கரில் 16 நக்சல்கள் சரண்

/

சத்தீஸ்கரில் 16 நக்சல்கள் சரண்

சத்தீஸ்கரில் 16 நக்சல்கள் சரண்

சத்தீஸ்கரில் 16 நக்சல்கள் சரண்


ADDED : ஜூன் 03, 2025 03:33 AM

Google News

ADDED : ஜூன் 03, 2025 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுக்மா : சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில், 16 நக்சல்கள் நேற்று போலீசில் சரணடைந்தனர்.

சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு 2026 மார்ச் 31க்குள், நக்சல்கள் ஆதிக்கத்தை முற்றிலும் ஒழிக்க, மத்திய - மாநில அரசுகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

அரசின் நடவடிக்கைக்கு பயந்தும், மனம் திருந்தியும் போலீசில் நக்சல்கள் சரணடைந்து வருகின்றனர். இதன்படி, சுக்மா மாவட்டத்தில் நேற்று, பெண் உட்பட 16 நக்சல்கள் போலீசில் சரணடைந்தனர்.

அவர்களில், நக்சல் அமைப்பின் மத்திய பிராந்தியக் குழுவில் தீவிரமாக செயல்பட்ட ரீட்டா என்ற டோடி சுக்கி, 36, ராகுல் புனேம், 18, ஆகியோர் முக்கியமானவர்கள்.

இவர்களை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு, தலா எட்டு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சரணடைந்தவர்களில் ஒன்பது பேர் கெர்லபெண்டா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இதன் வாயிலாக, அந்த கிராமம் நக்சல் இல்லாத இடமாக மாறியுள்ளது.

சரணடைந்த 16 நக்சல்களுக்கு, தலா 50,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு, சுக்மா உட்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய சத்தீஸ்கரின் பஸ்தார் மண்டலத்தில், 792 நக்சல்கள் சரணடைந்தனர்.






      Dinamalar
      Follow us