sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கன மழை, நிலச்சரிவால் சிக்கிமில் தவித்த 1,678 பயணிகள் மீட்பு

/

கன மழை, நிலச்சரிவால் சிக்கிமில் தவித்த 1,678 பயணிகள் மீட்பு

கன மழை, நிலச்சரிவால் சிக்கிமில் தவித்த 1,678 பயணிகள் மீட்பு

கன மழை, நிலச்சரிவால் சிக்கிமில் தவித்த 1,678 பயணிகள் மீட்பு


ADDED : ஜூன் 02, 2025 10:02 PM

Google News

ADDED : ஜூன் 02, 2025 10:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்டாக்: கன மழை மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சிக்கிம் மாநிலத்தில் 1,678 சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.லாச்சென் பகுதியில் 100 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

சிக்கிமில் கடந்த மே 29 முதல் தொடர்ந்து பெய்த மழையால் மங்கன் மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன, பிடாங் மற்றும் சங்க்காலாங்கில் உள்ள பாலங்கள் சேதமடைந்தன, மேலும் பல நாட்களாக சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. சில நாட்களுக்கு பின்னர் சிக்கித்தவித்த 1,678 பயணிகள் இன்று பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். லாச்செங்கில் 100 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிக்கிம் டிஜிபி அக்ஷய் சச்தேவா கூறியதாவது:

எல்லைச் சாலைகள் அமைப்பு (பி.ஆர்.ஓ) மங்கன் மாவட்டத்தில் உள்ள லாச்சுங்கிற்கு சாலை இணைப்பை மீட்டெடுத்த பிறகு சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றும் பணி தொடங்கியது.

லாச்சுங் மற்றும் சுங்தாங் நகரங்களில் சிக்கித் தவிக்கும் 1,678 சுற்றுலாப் பயணிகள் 284 வாகனங்கள் மற்றும் 16 மோட்டார் சைக்கிள்கள் மூலம் டிசோங்கு நகரத்திற்கு அருகிலுள்ள பிடாங் வழியாக காங்டாக்கிற்கு புறப்பட்டனர்.லாச்சனில் சிக்கித் தவிக்கும் 100க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றும் முயற்சிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அக்ஷய் சச்தேவா கூறினார்.






      Dinamalar
      Follow us