sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சட்டவிரோதமாக வசித்த 183 பேர் கைது

/

சட்டவிரோதமாக வசித்த 183 பேர் கைது

சட்டவிரோதமாக வசித்த 183 பேர் கைது

சட்டவிரோதமாக வசித்த 183 பேர் கைது


ADDED : டிச 20, 2024 05:34 AM

Google News

ADDED : டிச 20, 2024 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி: ''சமீப நாட்களில் பெங்களூரு நகர் உட்பட கர்நாடகாவில் சட்டவிரோதமாக வசித்த 24 பாகிஸ்தானியர்கள், 159 வங்கதேசத்தவரை கைது செய்துள்ளோம்,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.

மேல்சபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் அருண் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் பரமேஸ்வர் கூறியதாவது:

மாநிலத்துக்குள் அவ்வப்போது அத்துமீறி நுழையும், வெளிநாட்டவரை கண்காணிக்க, பெங்களூரு நகரில் சிறப்பு பிரிவு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து, பெங்களூரு வருவோர் குறித்து, வெளிநாட்டவர் பதிவு அலுவலகத்தில் இருந்து தகவல் பெறப்படுகிறது. இங்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அந்தந்த மண்டல டி.சி.பி.,க்கள் நடவடிக்கை எடுப்பர்.

டி.சி.பி.,க்கள் மட்டுமின்றி, மத்திய குற்றப்பிரிவும் கூட, சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டவர் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். பெங்களூரை தவிர மற்ற நகரங்கள், மாவட்டங்களில் சட்டவிரோதமாக நுழையும் வெளிநாட்டவரை கண்டுபிடிக்க, சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு செயல்படுகிறது.

சமீப நாட்களில் பெங்களூரு நகர் உட்பட, கர்நாடகாவில் சட்டவிரோதமாக வசித்த 24 பாகிஸ்தானியர்கள், 159 வங்கதேசத்தவரை கைது செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us