sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கார் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 குழந்தைகள் பலி

/

கார் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 குழந்தைகள் பலி

கார் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 குழந்தைகள் பலி

கார் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 குழந்தைகள் பலி


ADDED : ஜூலை 13, 2025 01:16 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 01:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடுகார் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில், படுகாயமடைந்த தாய், மூன்று குழந்தைகளில், இரு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்துார் பொல்ப்புள்ளியை சேர்ந்த மாட்டினின் மனைவி எல்சி, 40; பாலக்காடு தனியார் மருத்துவமனை செவிலியர். இவர்கள் குழந்தைகள் அலீனா, 10, ஆல்பின், 6, எமிலி, 4.

நேற்று முன்தினம் காரில் வேலைக்கு சென்று, மாலையில் எல்சி வீடு திரும்பிய போது, வீட்டில் இருந்த மூன்று குழந்தைகளும் ஓடி வந்து காரில் ஏறியுள்ளனர். அப்போது, காரில் பொருத்தப்பட்டிருந்த காஸ் சிலிண்டர் திடீரென தீப்பிடித்து வெடித்தது.

இதில், தாயும், மூன்று குழந்தைகளும் படுகாயமடைந்தனர். அப்பகுதி மக்கள் அவர்களை கொச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி குழந்தைகள் ஆல்பின், எமிலி இருவரும் உயிரிழந்தனர். தீக்காயமடைந்த மற்ற இருவரின் உடல் நிலையும் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us