sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அரசு பஸ் மோதி 2 குழந்தைகள் பலி

/

அரசு பஸ் மோதி 2 குழந்தைகள் பலி

அரசு பஸ் மோதி 2 குழந்தைகள் பலி

அரசு பஸ் மோதி 2 குழந்தைகள் பலி


ADDED : ஜன 10, 2025 07:09 AM

Google News

ADDED : ஜன 10, 2025 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராம்நகர்: ராம்நகரில் இரு சக்கர வாகனத்தின் மீது அரசு பஸ் மோதியதில், தமிழகத்தை சேர்ந்த இரு குழந்தைகள் உயிரிழந்தனர்.

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை போகசந்திரா கிராமத்தை சேர்ந்தவர் பைரப்பா. இவருக்கு பிரதீப், 5, பாவ்யா, 3 என இரு குழந்தைகள் இருந்தனர்.

ராம்நகரின் அச்சலு தொட்டி காலனியில், இவரது உறவினர் கோவிந்தா வசித்து வருகிறார். இவர், அங்குள்ள ஒரு பண்ணையில் பணிபுரிகிறார்.

சில நாட்களுக்கு முன், தன் இரு குழந்தைகளையும், கோவிந்தா வீட்டில் பைரப்பா விட்டிருந்தார். நேற்று காலையில் கோவிந்தா, தனது நண்பர் மது, பைரப்பாவின் இரு குழந்தைகள் என நான்கு பேரும் இரு சக்கர வாகனத்தில் பண்ணைக்கு சென்று கொண்டிருந்தனர்.

ராம்நகரில் இருந்து கனகபுராவுக்கு வந்த கே.எஸ்.ஆர்.டி.சி., அரசு பஸ், இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் இரு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மது, பைரப்பா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராம்நகர் ரூரல் போலீசார், பஸ் ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us