அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கங்களால் குலுங்கிய ஹிமாச்சல்; மக்கள் அதிர்ச்சி
அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கங்களால் குலுங்கிய ஹிமாச்சல்; மக்கள் அதிர்ச்சி
ADDED : ஆக 20, 2025 07:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிம்லா: ஹிமாச்சல் பிரதேசத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
சம்பா பகுதியில் இன்று அதிகாலை 3.27 மணியளவில் முதல் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 3.3 ஆக பதிவானது.
அதன் பின்னர், மீண்டும் அதிகாலை 4.39 மணிக்கு அடுத்த நிலநடுக்கம் பதிவானது. ரிக்டரில் 4 ஆக பதிவான இந்நிலநடுக்கம், 10 கிமீ ஆழத்தை மையம் கொண்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. ஒரே நாளில் மிக குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கங்கள் பதிவானதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.