sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போதை பொருளுடன் 2 நைஜீரியர்கள் கைது

/

போதை பொருளுடன் 2 நைஜீரியர்கள் கைது

போதை பொருளுடன் 2 நைஜீரியர்கள் கைது

போதை பொருளுடன் 2 நைஜீரியர்கள் கைது


ADDED : நவ 22, 2024 07:16 AM

Google News

ADDED : நவ 22, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹெசரகட்டாபுரா: போதைப்பொருள் விற்று வந்த, நைஜீரியர்கள் இருவரை சி.சி.பி., போலீசார் கைது செய்தனர். ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கல்வி, தொழில், சிகிச்சை என, பல காரணங்களுக்காக பெங்களூருக்கு வரும் நைஜீரிய பிரஜைகள், விசா முடிந்தும் சொந்த நாட்டுக்கு செல்வது இல்லை. சட்டவிரோதமாக இங்கேயே வசிக்கின்றனர். போதைப்பொருள் விற்பதில் ஈடுபடுகின்றனர். போலீசாரும் ஆங்காங்கே சோதனை நடத்தி, கைது செய்கின்றனர். கிலோ கணக்கில் போதைப் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்.

பெங்களூரு வடக்கு தாலுகாவின், ஹெசரகட்டாபுராவில் ஒரு வீட்டில் நைஜீரிய பிரஜைகள் போதைப்பொருள் விற்பதாக, தகவல் கிடைத்தது. சி.சி.பி., போலீசார், நேற்று அதிகாலை அங்கு சென்று சோதனை நடத்தி, ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

நைஜீரிய பிரஜைகள் டேவிட், 35, கோபி, 34, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கல்வி விசாவில், இந்தியாவுக்கு வந்தனர். அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கில், போதைப்பொருள் விற்றதை ஒப்புக்கொண்டனர்.






      Dinamalar
      Follow us