sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தந்தையை கொன்ற 2 மகன்கள் கைது

/

தந்தையை கொன்ற 2 மகன்கள் கைது

தந்தையை கொன்ற 2 மகன்கள் கைது

தந்தையை கொன்ற 2 மகன்கள் கைது


ADDED : மார் 14, 2024 11:06 PM

Google News

ADDED : மார் 14, 2024 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கதக்: சொத்து தகராறில், தந்தையை அடித்துக் கொன்ற மகன்கள் கைது செய்யப்பட்டனர்.

கதக்கின், லக்குன்டி கிராமத்தில் வசித்தவர் கரியல்லப்பனவர், 52. இவருக்கு இரண்டு மனைவியர். தற்போது இரண்டாவது மனைவி ரேகாவுடன் வசித்தார்.

இவருக்கு சொந்தமாக 6 ஏக்கர் நிலம் உள்ளது. தங்கள் பெயருக்கு எழுதி வைக்கும்படி, முதல் மனைவி கஸ்துாரம்மாவின் மகன்கள் பிரகாஷ், 23, மல்லேஷ், 25, தகராறு செய்தனர்.

இதற்கு கரியல்லப்பனவர் சம்மதிக்கவில்லை. இதனால், தந்தைக்கும், மகன்களுக்கும் மனஸ்தாபம் இருந்தது.

இந்நிலையில் சமீபத்தில், இவர் 3 ஏக்கர் நிலத்தை விற்று, பணத்தை வைத்திருந்தார்.

இதை தங்களுக்கு பகிர்ந்தளிக்கும்படி மகன்கள் கேட்டனர்; தந்தை மறுத்தார். நேற்று காலை ரேகா வயலுக்கு சென்றிருந்தார்.

அப்போது அங்கு வந்த மகன்கள் மல்லேஷும், பிரகாஷும் பணம் விஷயமாக தந்தையிடம் பேசினர். மூவருக்கும் வாக்குவாதம் நடந்தது.

கோபமடைந்த மகன்கள், இரும்பு ராடால் தந்தையை தாக்கினர். காயமடைந்த கரியல்லப்பனவர், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதுகுறித்து கதக் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இரு மகன்களையும் கைது செய்து, விசாரணை நடத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us