sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தெலுங்கானாவில் 20 நக்சல்கள் கைது ஆயுதங்கள் பறிமுதல்

/

தெலுங்கானாவில் 20 நக்சல்கள் கைது ஆயுதங்கள் பறிமுதல்

தெலுங்கானாவில் 20 நக்சல்கள் கைது ஆயுதங்கள் பறிமுதல்

தெலுங்கானாவில் 20 நக்சல்கள் கைது ஆயுதங்கள் பறிமுதல்


ADDED : மே 18, 2025 03:32 AM

Google News

ADDED : மே 18, 2025 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத் : தெலுங்கானாவில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 20 நக்சல்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா எல்லையில் அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஏராளமான நக்சல்கள் பதுங்கியிருந்ததை அடுத்து, இரு மாநில போலீசாருடன் இணைந்து துணை ராணுவப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். கடந்த ஏப். 21ம் தேதி முதல் 21 நாட்களுக்கு நடந்த மெகா தேடுதல் வேட்டையில் 16 பெண்கள் உட்பட 31 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.

எஞ்சிய நக்சல்கள், தெலுங்கானாவின் முளுகு மாவட்டத்தின் காரேகுட்டா பகுதியில் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு தப்பிச் செல்ல இருப்பதாகவும் மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, முளுகு மாவட்டம் முழுதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

கடந்த ஒரு வாரமாக நடந்த தீவிர சோதனையில், 20 நக்சல்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வெடிமருந்துகள், துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us