sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மரத்தில் அரசு பஸ் மோதி 20 பயணியர் படுகாயம்

/

மரத்தில் அரசு பஸ் மோதி 20 பயணியர் படுகாயம்

மரத்தில் அரசு பஸ் மோதி 20 பயணியர் படுகாயம்

மரத்தில் அரசு பஸ் மோதி 20 பயணியர் படுகாயம்


ADDED : பிப் 14, 2025 05:23 AM

Google News

ADDED : பிப் 14, 2025 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாண்டியா: மாண்டியா மாவட்டம்,ஆலேனஹள்ளியில் இருந்து, நேற்று காலை கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ், கிருஷ்ணராஜ் பேட்டுக்கு 30க்கும் மேற்பட்டபயணியருடன் சென்றுகொண்டிருந்தது.

குந்தஹள்ளி அருகே வரும் போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையில் தாறுமாறாக ஓடி, சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பஸ்சில் இருந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பயணியரில் பெரும்பாலானோருக்கு கை, கால்கள் முறிவு என ௨௦க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்தை பார்த்த அப்பகுதியினர், கிருஷ்ணராஜ்பேட் ரூரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களில் ஐந்து பேரின் நிலை, கவலைக்கிடமாக இருந்தது. உடனடியாக அவர்கள் மைசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து தொடர்பாக, தன் எக்ஸ் பதிவில் மத்திய அமைச்சரும், மாண்டியா எம்.பி.,யுமான குமாரசாமி குறிப்பிடுகையில், 'மாவட்ட மருத்துவ அதிகாரியை தொடர்பு கொண்டு, விபத்தில் காயமடைந்தோருக்கு இலவசமாகவும், தரமான சிகிச்சை அளிக்கவும் கூறியுள்ளேன்' என்றார்.






      Dinamalar
      Follow us