sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.200 கோடி போதைப்பொருள் பறிமுதல்

/

ரூ.200 கோடி போதைப்பொருள் பறிமுதல்

ரூ.200 கோடி போதைப்பொருள் பறிமுதல்

ரூ.200 கோடி போதைப்பொருள் பறிமுதல்


ADDED : பிப் 08, 2025 01:41 AM

Google News

ADDED : பிப் 08, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பைமஹாராஷ்டிராவில், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர், இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்தனர்.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், கடந்த மாதம் 200 கிராம் 'கோகைன்' போதைப் பொருளை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்த விசாரணையில் கிடைத்த தகவலின்படி, நவி மும்பையில் உள்ள சர்வதேச கூரியர் ஏஜன்சி நிறுவனத்தில், சமீபத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர்.

அப்போது, 11.540 கிலோ மிக உயர் தர கோகைன், 4.9 கிலோ ஹைப்ரிட் ஸ்ட்ரெய்ன் ஹைட்ரோபோனிக் கஞ்சா, 5.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் 1.60 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

இவற்றின் சர்வதேச மதிப்பு, 200 கோடி ரூபாய். இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், இந்த கும்பல் வெளிநாட்டில் உள்ள ஒரு குழுவால் இயக்கப்படுவதும், கைப்பற்றப்பட்ட சில கடத்தல் பொருட்கள் அமெரிக்காவிலிருந்து மும்பைக்கு எடுத்து வரப்பட்டு, கூரியர் அல்லது சிறிய சரக்கு சேவைகள் வாயிலாக, இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள பலருக்கு அனுப்பப்பட்டதும் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us