sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கூட்டமாக வீடு தேடி வந்த முதலைகள்: பீதியில் குஜராத் மக்கள்

/

கூட்டமாக வீடு தேடி வந்த முதலைகள்: பீதியில் குஜராத் மக்கள்

கூட்டமாக வீடு தேடி வந்த முதலைகள்: பீதியில் குஜராத் மக்கள்

கூட்டமாக வீடு தேடி வந்த முதலைகள்: பீதியில் குஜராத் மக்கள்

5


ADDED : செப் 01, 2024 11:33 AM

Google News

ADDED : செப் 01, 2024 11:33 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வதோதரா: குஜராத்தின் வதோதராவில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 24 முதலைகளை வனத்துறையினர் மீட்டு ஆற்றுக்குள் விட்டனர்.

குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 28 பேர் உயிரிழந்தனர். 24 ஆறுகள் மற்றும் 137 நீர்த்தேக்கங்களில் வெள்ள அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்ந்து வருகிறது.

அஜ்வா அணை நிரம்பியதைத் தொடர்ந்து அதில் இருந்து உபரி நீர் விஸ்வாமித்ரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. 440 முதலைகளுக்கு இந்த அணை புகலிடமாக இருந்த நிலையில், பல வெள்ள நீரில் அடித்து வரப்பட்டு வதோதரா நகரில் பல இடங்களில் உலாவத் துவங்கின. சமீபத்தில், தபோய் பகுதியில் முதலை தாக்கியதில் கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மீன் பிடிக்க வலை விரித்த போது முதலை தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தாலும், மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள் 24 முதலைகளை பிடித்து மீண்டும் விஸ்வாமித்ரி அணைக்குள் விட்டனர். இத்துடன் பாம்புகள், ராஜநாகங்கள், ஆமைகள் உள்ளிட்ட 75 உயிரினங்களும் குடியிருப்பு பகுதியில் இருந்து மீட்கப்பட்டன. முதலைகள் மனிதர்களை தாக்காது என விளக்கமளித்து உள்ள அதிகாரிகள் , அவை பசு, எருமை உள்ளிட்ட கால்நடைகளை தான் தாக்கும் எனவும் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us