உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : ஜன 23, 2024 07:20 PM
ADDED : ஜன 23, 2024 07:13 PM

அ நிறம் | அளவு
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று (23-ம் தேதி) 2.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை நேற்று முன்னின்று நிறைவேற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ''புதிய சகாப்தம் துவங்கியது,'' என பெரும் ஆரவாரத்துக்கு நடுவே பிரகடனம் செய்தார்.விமரிசையாக நடந்தேறிய பால ராமர் பிராண பிரதிஷ்டை செய்தார்.
தொடர்ந்து இன்று (23-ம் தேதி) முதல் பொதுமக்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து இன்று (23-ம் தேதி) 2.5 லட்சம் முதல் 3 லட்சம் பக்தர்கள் ராமரை தரிசித்ததாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கண்காணித்து வரும் உ.பி. மாநில காவல்துறை(சட்டம்,ஒழுங்கு ) டி.ஜி.பி., தலைமை செயலர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
