sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

2,500 எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்கள் கிராமத்தில் சோலார் மின் உற்பத்தி மையம்

/

2,500 எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்கள் கிராமத்தில் சோலார் மின் உற்பத்தி மையம்

2,500 எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்கள் கிராமத்தில் சோலார் மின் உற்பத்தி மையம்

2,500 எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்கள் கிராமத்தில் சோலார் மின் உற்பத்தி மையம்


ADDED : பிப் 17, 2024 04:43 AM

Google News

ADDED : பிப் 17, 2024 04:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

l கர்நாடகாவில் தற்போது, 32,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில், அதிக முதலீடு ஈர்க்கப்பட்டு, மின்சார உற்பத்தித்திறன், 60,000 மெகாவாட்டாக உயர்த்தப்படும்

l கர்நாடக மின்சார வாரியம், டெஹ்ரி ஹைட்ரோ மேம்பாட்டு வாரியம் நிறுவனம் சார்பில், மிதக்கும் சோலார் மின் உற்பத்தி மற்றும் தரை மின் உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்படும்

l 3.37 லட்சம் விவசாயிகளுக்கு அனுகூலம் ஏற்படும் வகையில், விவசாய பம்ப்செட்களுக்கு சோலார் மின்சார திட்டம் 1ன் மூலம், 1,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். 2ம் கட்ட திட்டத்தின் கீழ், 1,192 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்

l பசுமை ஹைட்ரஜன் மின் உற்பத்தியில், தொழில் முதலீடு ஈர்க்கும் வகையில், சோதனை முறையில் 10 கோடி ரூபாய் செலவில் 300 கிலோ வாட் திறன் கொண்ட பசுமை ஹைட்ரஜன் மின் உற்பத்தி மையம் அமைக்கப்படும்

l ஒவ்வொரு மின் வாரியங்களின் குறிப்பிட்ட ஒரு பிற்படுத்தப்பட்ட கிராமத்தில் 500 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், சோலார் மின் உற்பத்தி மையம் அமைக்கப்படும்

l புதுப்பிக்கக்கூடிய மின்சாரத்தை, அதிக அளவில் உற்பத்தி செய்யும் வகையில், தேவைப்படும் பகுதிகளில் உற்பத்தி மையங்கள் நிறுவி, அதை வினியோகிக்கப்படும்

l 66 கிலோ வாட், 110 கிலோ வாட் மின்சார திறன் கொண்ட நடமாடும் மின்மாற்றிகள் வாங்கப்படும்

l பெங்களூரு நகர சுற்று வட்டார பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாகி வருவதால், மின்சார தேவை அதிகரித்துள்ளது. இதற்காக, தனியார் உதவியுடன் துணை மண்டலங்கள் மேம்படுத்தப்படும்

l தனியார் உதவியுடன், 2,500 எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும். இது தவிர, மின் வினியோக நிறுவனங்கள் மூலம், 35 கோடி ரூபாயில், 100 சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும்.






      Dinamalar
      Follow us