sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வங்கதேசத்தவர் 27 பேர் கைது; கேரளா போலீசார் அதிரடி

/

வங்கதேசத்தவர் 27 பேர் கைது; கேரளா போலீசார் அதிரடி

வங்கதேசத்தவர் 27 பேர் கைது; கேரளா போலீசார் அதிரடி

வங்கதேசத்தவர் 27 பேர் கைது; கேரளா போலீசார் அதிரடி

17


ADDED : ஜன 31, 2025 10:42 AM

Google News

ADDED : ஜன 31, 2025 10:42 AM

17


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: கேரளா, கொச்சியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வருவோர், மேற்கு வங்க மாநிலத்தில் பாதுகாப்பு இல்லாத எல்லைப் பகுதிகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். தங்களை இந்திய பிரஜையாக மாற்றிக் கொள்ள, ஏஜன்டுகளை பிடித்து போலியான ஆவணங்கள் மூலம் ஆதார் கார்டு உள்ளிட்ட ஏதாவது ஒன்றை பெறுகின்றனர்.

கோல்கட்டாவில் இருந்து ரயில் மூலம் தென் மாநிலங்களுக்கு வருகின்றனர். தொழில் வாய்ப்புகள் மிகுந்த சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர் மற்றும் கேரள நகரங்களுக்கு சென்று செட்டில் ஆகி விடுகின்றனர். இப்படி சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை கைது செய்யும் பணி திருப்பூரில் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.

தற்போது அதேநிலை கேரளாவிலும் நீடிக்கிறது. கேரளா, கொச்சியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் வங்கதேசத்தைச் சேர்ந்த 34 பேர் பிடிபட்டிருப்பதாக கேரள போலீசார் தகவல் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us