ADDED : ஜூன் 27, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:இஸ்ரேல் - ஈரான் போரை தொடர்ந்து, ஈரானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்க, 'ஆப்பரேஷன் சிந்து' நடவடிக்கையை மத்திய அரசு துவங்கியது.
அதன்படி, மஷாத், யெரெவன், அஷ்காபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்து இயக்கப்படும் தனி விமானங்கள் வாயிலாக இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். முதல் விமானம், ஈரானில் இருந்து கடந்த 19-ம் தேதி, 290 இந்தியர்களுடன் டில்லி வந்தது. அதற்கு அடுத்த நாள், 310 இந்தியர்கள் மீட்டு அழைத்து வரப்பட்டனர்.
இதேபோன்று மஷாத்தில் இருந்து நேற்று டில்லி வந்த சிறப்பு விமானத்தில் 272 இந்தியர்களும், மூன்று நேபாள நாட்டவர்களும் அழைத்து வரப்பட்டனர். இதுவரை, 3,426 இந்தியர்கள் ஈரானில் இருந்து மீட்டு அழைத்து வரப்பட்டுள்ளதாக நம் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.