sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்

/

ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்

ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்

ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்

3


ADDED : ஜூன் 24, 2025 09:40 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 09:40 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டில்லி: ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் முக்கிய கட்டமாக, ஈரானில் சிக்கி தவித்த 292 இந்தியர்கள் இன்று அதிகாலை பத்திரமாக டில்லி அழைத்து வரப்பட்டனர்.

ஈரான், இஸ்ரேல் போர் எதிரொலியாக அந்நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து ஆபரேஷன் சிந்து நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது. அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஈரானின் மஷாஹத்தில் சிக்கி தவித்த 292 இந்தியர்கள் இன்று அதிகாலை 3.30 மணியளவில் டில்லி விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரும் சிறப்பு விமானம் மூலம், ஈரானில் இருந்து பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

விமான நிலையம் வந்த அவர்கள், மத்திய அரசின் மீட்பு நடவடிக்கைக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொண்டனர். இந்த விவரத்தை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தற்போது வரை மொத்தம் 2,295 இந்தியர்கள் மிகவும் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் அவர் தமது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us