ADDED : மார் 21, 2025 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹாசன்,: ஹாசனில் கடந்த சில நாட்களுக்கு முன், யானை மிதித்து சுசீலம்மா என்ற பெண் உயிரிழந்தார். யானைகளை பிடிக்க, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து மறுநாளே, அந்த யானையை பிடித்தனர். மீதமுள்ள யானைகளை பிடிக்கும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். நேற்று காலை பேலுாரின் வட்டேஹள்ளி கிராமத்தில் யானையை பிடித்தனர். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
'இன்னும் ஒரு யானையை பிடிக்க வேண்டும்' என அதிகாரிகள் கூறி உள்ளனர்.