/
செய்திகள்
/
இந்தியா
/
3 கல்லுாரிகள், 45 பள்ளிகளுக்கு இ - மெயில் மிரட்டல் * ஒரு வாரத்தில் நான்காவது முறையாக அச்சுறுத்தல் * பெற்றோர், ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு
/
3 கல்லுாரிகள், 45 பள்ளிகளுக்கு இ - மெயில் மிரட்டல் * ஒரு வாரத்தில் நான்காவது முறையாக அச்சுறுத்தல் * பெற்றோர், ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு
3 கல்லுாரிகள், 45 பள்ளிகளுக்கு இ - மெயில் மிரட்டல் * ஒரு வாரத்தில் நான்காவது முறையாக அச்சுறுத்தல் * பெற்றோர், ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு
3 கல்லுாரிகள், 45 பள்ளிகளுக்கு இ - மெயில் மிரட்டல் * ஒரு வாரத்தில் நான்காவது முறையாக அச்சுறுத்தல் * பெற்றோர், ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு
ADDED : ஜூலை 18, 2025 08:19 PM

புதுடில்லி:குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறி, மூன்று கல்லுாரிகள் மற்றும் 45 பள்ளிகளுக்கு நேற்று காலை மிரட்டல் இ - மெயில் வந்ததால், அந்த கல்வி வளாகங்கள் முழுமையாக சோதனையிடப்பட்டன. ஒரே வாரத்தில் நான்காவது முறையாக வந்த மிரட்டல் இ - மெயிலை கண்டுபிடிக்காத பா.ஜ., அரசுக்கு, எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வாரத்தில் இறுதி வேலை நாளான நேற்று வெள்ளிக்கிழமை, தலைநகர் டில்லியில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு மிரட்டல் நாளாக அமைந்திருந்தது. இந்திரபிரஸ்தா பெண்கள் கல்லுாரி, ஹிந்து கல்லுாரி மற்றும் ஸ்ரீ ராம் காமர்ஸ் கல்லுாரி ஆகிய மூன்று கல்லுாரிகளுக்கு, மிரட்டல் இ - மெயில் வந்திருந்தது.
அந்த இ - மெயிலில், 'ஹலோ... உங்கள் பள்ளி அல்லது கல்லுாரி வளாகத்தில், பயங்கர சேதத்தை ஏற்படுத்தும் வெடிகுண்டுகள் பல இடங்களில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை எந்த நேரமும் வெடிக்கச் செய்யலாம். அந்த குண்டுகள், கறுப்பு நிற பையில் வைக்கப்பட்டுள்ளன' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதுபோல, டில்லி மாநகரின் பல பகுதிகளில் உள்ள, 45க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கும் மிரட்டல் இ - மெயில் வந்திருந்தது. அதையடுத்து, அந்த பள்ளிகளின் வளாகங்களில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது ; மோப்ப நாய்கள் மற்றும் நவீன இயந்திரங்களுடன் சோதனை மாலை வரை நடந்தது.
எனினும், எந்த இடத்திலும் குண்டுகள் வெடிக்கவில்லை. இதனால், நிம்மதி பெருமூச்சை பள்ளி, கல்லுாரி நிர்வாகங்கள் வெளியிட்டாலும், பள்ளிகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மிரட்டல் இ - மெயில் வந்ததும், பல கல்லுாரி மற்றும் பள்ளிகளில் மாணவர்கள், வீடுகளுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இன்னும் பல பள்ளிகளில், மாணவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கும்பலாக அமர வைக்கப்பட்டனர். இன்னும் சில பள்ளிகளில், வழக்கம் போல இயங்கின. எத்தனை நாட்களுக்குத் தான் இந்த மிரட்டல் என எண்ணி, அந்த பள்ளிகள் இயங்கின.