உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூன் 28, 2025 08:23 PM
அ நிறம் | அளவு
பிரோசாபாத்:லாரி மீது பஸ் மோதி, மூன்று பயணியர் உயிரிழந்தனர்.
டில்லியில் இருந்து ஜலான் சென்ற பஸ், உ.பி., மாநிலம் பிரோசாபாத் அருகே, ஆக்ரா - -லக்னோ விரைவு சாலையில், எதிரில் ஓடுகள் ஏற்றி வந்த லாரியுடன் மோதியது. பஸ்சில் இருந்த மூன்று பேர் அதே இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயம் அடைந்த மற்ற பயணியர் சைபை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இறந்தவர்களில் ஒருவர் விஜேந்திர பப்பு என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மற்ற இருவரை அடையாளம் காண விசாரணை நடக்கிறது.
