sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

2 நைஜீரியர் உட்பட 3 பேர் கைது ரூ.3 கோடி கோகைன் பறிமுதல்

/

2 நைஜீரியர் உட்பட 3 பேர் கைது ரூ.3 கோடி கோகைன் பறிமுதல்

2 நைஜீரியர் உட்பட 3 பேர் கைது ரூ.3 கோடி கோகைன் பறிமுதல்

2 நைஜீரியர் உட்பட 3 பேர் கைது ரூ.3 கோடி கோகைன் பறிமுதல்


ADDED : அக் 11, 2024 09:33 PM

Google News

ADDED : அக் 11, 2024 09:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரு நைஜீரியர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு, 3.3 கோடி மதிப்புள்ள 563 கிராம் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ரகசியத் தகவல் அடிப்படையில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஜோசுவா அமராச்சுக்வா,30, என்பவரும் அவரது கூட்டாளியும் கார் டிரைவருமான வினீத்,24, ஆகிய இருவரும் செப். 27ல் கைது செய்யப்பட்டனர். ஜோசுவாவிடம் இருந்து 257 கிராம் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது.

இருவரிடமும் நடத்திய விசாரணை அடிப்படயில், ஹரியானா மாநிலம் சோஹ்னாவில் பதுங்கி இருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கோன் என் கோலோ செய்டோ என்ற மைக்,27, என்பவரும் கைது செய்யப்பட்டு, 306 கிராம் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள 563 கிராம் கோகைனின் சர்வதேச மதிப்பு 3.3 கோடி ரூபாய்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us