sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீரில் 'என்கவுன்டர்' 3 பயங்கரவாதிகள் பலி

/

காஷ்மீரில் 'என்கவுன்டர்' 3 பயங்கரவாதிகள் பலி

காஷ்மீரில் 'என்கவுன்டர்' 3 பயங்கரவாதிகள் பலி

காஷ்மீரில் 'என்கவுன்டர்' 3 பயங்கரவாதிகள் பலி


ADDED : ஏப் 13, 2025 12:16 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிஷ்துவார்: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், ஜெய்ஷ் - இ - முகமது கமாண்டர் உட்பட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் வாயிலாக, பயங்கரவாதிகளின் ஊடுருவல் முறியடிக்கப்பட்டது.

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தின் சத்ரு வனப்பகுதியில், பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு கடந்த 9ம் தேதி தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உள்ளூர் போலீசார் உதவியுடன், பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். இதையறிந்த பயங்கரவாதிகள் இருப்பிடத்தை அவ்வப்போது மாற்றி வந்தனர்.

ஆளில்லா குட்டி விமானங்கள் வாயிலாக இரவு பகலாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் இறுதியில், பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் நெருங்கினர்.

தப்ப முயன்ற பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

பல மணி நேரம் நீடித்த சண்டையில், பயங்கரவாதி ஒருவர் நேற்று முன்தினம் கொல்லப்பட்டார்.

இரு தரப்பினருக்கும் இடையிலான சண்டை தொடர்ந்தது.

இந்நிலையில், மேலும் இரு பயங்கரவாதிகள் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அப்பகுதியில் ஆய்வு செய்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் பயன்படுத்திய நவீன ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள், வரைபடங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே, உதம்பூர் மாவட்டத்தில் பசந்த்நகர் மற்றும் ராம்நகர் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, பாதுகாப்பு படையினர் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us