ADDED : டிச 28, 2024 10:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனேஸ்வர்:ஒடிசா மாநிலத்தில் தேடப்பட்டு வந்த பெண் மாவோயிஸ்டுகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.ஒடிசா மாநிலம் மல்கான்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட் அமைப்பினர் அட்டகாசம் செய்து வருகின்றனர்.
அவர்களில், முக்கிய நபர்களைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு, உரிய சன்மானம் வழங்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு 4 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட ஸ்வப்னா என்ற பெண் மாவோயிஸ்ட் இன்று சரண் அடைந்தார். இவர் 2018ம் ஆண்டு முதல் மாவோயிஸ்ட் அமைப்பில் செயல்பட்டு வருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
அவர் தவிர, தலா 2 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்த பெண் மாவோயிஸ்டுகள் பபிதா, சுனிதா ஆகியோரும் இன்று மாநில போலீசாரிடம் சரண் அடைந்தனர்.

