sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

300 துப்பாக்கிகள் மணிப்பூரில் பறிமுதல்

/

300 துப்பாக்கிகள் மணிப்பூரில் பறிமுதல்

300 துப்பாக்கிகள் மணிப்பூரில் பறிமுதல்

300 துப்பாக்கிகள் மணிப்பூரில் பறிமுதல்


ADDED : ஜூன் 15, 2025 12:13 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இடஒதுக்கீடு தொடர்பாக மெய்டி -- கூகி இனத்தவரிடையே 2023ல் ஏற்பட்ட கலவரத்தில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மத்திய, மாநில அரசின் முயற்சியால் அங்கு இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது.

இந்நிலையில், இம்பால் கிழக்கு, மேற்கு, பிஷ்ணுபூர், காக்சிங், தவ்பால் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பெருமளவில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மணிப்பூர் போலீசார், மத்திய ஆயுதப்படை மற்றும் ராணுவத்தினர் இணைந்து நேற்று முன்தினம் இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, 151 எஸ்.எல்.ஆர்., துப்பாக்கிகள், 65 இன்சாஸ் துப்பாக்கிகள், 12 இலகுரக இயந்திர துப்பாக்கிகள், 6 ஏ.கே., ரக துப்பாக்கிகள் உட்பட மொத்தம் 328 துப்பாக்கிகள் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்டன. இது தவிர ஏராளமான வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us