sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

"கல்வராயன் மலை பகுதிக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தணும்: உயர்நீதிமன்றம்

/

"கல்வராயன் மலை பகுதிக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தணும்: உயர்நீதிமன்றம்

"கல்வராயன் மலை பகுதிக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தணும்: உயர்நீதிமன்றம்

"கல்வராயன் மலை பகுதிக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தணும்: உயர்நீதிமன்றம்

22


ADDED : ஜூலை 24, 2024 11:44 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 11:44 AM

22


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'கல்வராயன் மலைப்பகுதிக்கு சென்று மக்கள் நிலையை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்த வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்வராயன் மலையில் வசித்து வரும் மக்கள் மேம்பாடு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று (ஜூலை 24) விசாரணைக்கு வந்தது.



அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கல்வராயன் மலைப்பகுதிக்கு சென்று மக்கள் நிலையை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அமைச்சர் உதயநிதி சென்று பார்வையிட வேண்டும்.

நாங்கள் சென்று பார்வையிடுவதை விட அமைச்சர்கள் சென்றால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். கல்வராயன் மலைப்பகுதியில் சாலை வசதி, ரேஷன் கடைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

கல்வராயன் மலைப்பகுதி மக்களின் நிலை குறித்து, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து, வழக்கு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.






      Dinamalar
      Follow us