sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

"அரசியலமைப்பு சட்டம் குறித்து பேச காங்கிரசுக்கு உரிமை இல்லை": பிரதமர் மோடி

/

"அரசியலமைப்பு சட்டம் குறித்து பேச காங்கிரசுக்கு உரிமை இல்லை": பிரதமர் மோடி

"அரசியலமைப்பு சட்டம் குறித்து பேச காங்கிரசுக்கு உரிமை இல்லை": பிரதமர் மோடி

"அரசியலமைப்பு சட்டம் குறித்து பேச காங்கிரசுக்கு உரிமை இல்லை": பிரதமர் மோடி

27


UPDATED : ஜூன் 25, 2024 02:08 PM

ADDED : ஜூன் 25, 2024 10:41 AM

Google News

UPDATED : ஜூன் 25, 2024 02:08 PM ADDED : ஜூன் 25, 2024 10:41 AM

27


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'அரசியலமைப்பு சட்டம் மீது தங்களது அன்பை வெளிப்படுத்த காங்கிரசுக்கு உரிமை இல்லை' என பிரதமர் மோடி கூறினார்.

1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி தான் இந்தியாவில் முதல் முறையாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவு: எமர்ஜென்சியை எதிர்த்த அனைத்து மாமனிதர்களுக்கும், பெண்களுக்கும் மரியாதை செலுத்தும் நாள் இன்று. காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்திய, எமர்ஜென்சி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எப்படி அவர்கள் அடியோடு தகர்த்தனர் என்பதை நினைவூட்டுகிறது.

கூட்டாட்சி

எமர்ஜென்சியை விதித்தவர்களுக்கு நமது அரசியலமைப்பு சட்டம் மீது தங்களது அன்பை வெளிப்படுத்த காங்கிரசுக்கு உரிமை இல்லை.கூட்டாட்சி முறையை அழித்தவர்கள் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் விதிமுறைகளை மீறியவர்கள் இவர்கள் தான்.எமர்ஜென்சியை அமுல்படுத்துவதற்கு வழிவகுத்த மனநிலை அவர்களின் கட்சியினரிடையே உயிர்ப்புடன் இருக்கிறது.

சித்திரவதை

ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக, அப்போதைய காங்கிரஸ் அரசு ஜனநாயகக் கொள்கையை புறக்கணித்தது. காங்கிரஸ் கட்சிக்கு அடிபணியாதவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். நலிந்த பிரிவினரை குறிவைத்து சமூக ரீதியாக பிற்போக்குத்தனமான கொள்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பாரத மாதா கண்ணீர் வடித்த நாள்

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பதிவு: 50 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூன் 25, 1975 அன்று இந்த கருப்பு தினத்தில், அரசியலமைப்பை தூக்கியெறிந்தும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கியும், ஊடகங்களின் வாயைக் கட்டியும், நீதித்துறையை அடக்கிய சர்வாதிகாரியின் காலடியிலும் நமது ஜனநாயகம் எவ்வாறு நசுக்கப்பட்டது என்பதை தேசம் அதிர்ச்சியுடனும் திகிலுடனும் நினைத்துப் பார்க்கிறது.
ஆயுதமேந்திய ராணுவத்தினர் எங்கள் விடுதிக்குள் புகுந்து, விடுதி அறைகளை உதைத்து திறந்து, ரைபிள் துப்பாக்கியின் பின்பக்கத்தால் தாக்கி, புத்தகங்கள், உடைகளை கூட எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் எங்களை உடனடியாக வெளியேற்றிய நாளை நானும் எனது பல்கலைக்கழக நண்பர்களும் எப்படி மறக்க முடியும்?.
சொந்தப் பிள்ளைகளாலேயே முதுகில் குத்தப்பட்டு பாரத மாதா கண்ணீர் வடித்த நாள் அது. நமது தேசிய வரலாற்றின் இந்த கருப்பு அத்தியாயத்தை யாரும் நினைத்துக்கூட பார்க்காத வகையில் நமது தாய்நாட்டின் கண்ணியத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான உறுதியுடன் இந்த நாளில் துக்கம் அனுசரிப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us