"மக்களை ஒன்றிணைக்க காங்கிரஸ் முயற்சி": சொல்கிறார் ராகுல்!
"மக்களை ஒன்றிணைக்க காங்கிரஸ் முயற்சி": சொல்கிறார் ராகுல்!
ADDED : மார் 02, 2024 05:55 PM

போபால்: 'ஒரு பக்கம் ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்களை பா.ஜ., பிரிக்கிறது. மறுபுறம் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது' என ராகுல் கூறினார்.
மத்திய பிரதேச மாநிலம் மொரேனாவில் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை காங்கிரஸ் எம்.பி ராகுல் மேற்கொண்டார். அப்போது அங்கு நடந்த நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது: நாட்டின் விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தித் துறை ஆகிய அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து செல்வங்களும் ஒரு சில தொழிலதிபர்கள் கையில் உள்ளது.
யாத்திரையின் போது, நாட்டில் வெறுப்பு மற்றும் வன்முறை பரவுவதற்கு என்ன காரணம் என்று மக்களிடம் கேட்டேன். அதற்குக் காரணம் 'அநீதி' என்று அனைவரும் பதில் அளித்தனர். நாட்டில் மக்கள் பல்வேறு வழிகளில் அநீதி இழைக்கப்படுகிறார்கள். அதனால்தான் இந்தியாவில் வெறுப்பு பரவுகிறது.
ஒரு பக்கம் ஜாதி, மதத்தின் பெயரால் மக்களை பா.ஜ., பிரிக்கிறது. மறுபுறம் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. யாத்திரை மத்தியப் பிரதேசத்தின் புனித பூமிக்குள் நுழைந்துள்ளது.
நாட்டில் 50 சதவீதம் ஓபிசி, 15 சதவீதம் தலித் மற்றும் 8 சதவீதம் பழங்குடி மக்கள் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 73சதவீதம் ஆகும். நாட்டின் பெரிய நிறுவனங்களில் ஓபிசி, தலித் அல்லது பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக் கூட காண முடியாது. இவ்வாறு ராகுல் பேசினார்.

