sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போயிங் விமானங்களில் எரிபொருள் சுவிட்சுகளில் பிரச்னையில்லை : ஏர் இந்தியா அறிக்கை

/

போயிங் விமானங்களில் எரிபொருள் சுவிட்சுகளில் பிரச்னையில்லை : ஏர் இந்தியா அறிக்கை

போயிங் விமானங்களில் எரிபொருள் சுவிட்சுகளில் பிரச்னையில்லை : ஏர் இந்தியா அறிக்கை

போயிங் விமானங்களில் எரிபொருள் சுவிட்சுகளில் பிரச்னையில்லை : ஏர் இந்தியா அறிக்கை

4


ADDED : ஜூலை 22, 2025 02:44 PM

Google News

4

ADDED : ஜூலை 22, 2025 02:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: போயிங் விமானங்களின் எரிபொருள் சுவிட்ச் அமைப்புகளில் நடத்தப்பட்ட ஆய்வுப்பணிகள் முடிந்துவிட்டன. அந்த அமைப்புகளில் எந்த பிரச்னையும் கண்டறியப்படவில்லை என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

குஜராத்தின் ஆமதாபாத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787 - 8 ட்ரீம் லைனர் இரட்டை இன்ஜின் விமான விபத்தின் முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியானது. இது விவாதத்தை கிளப்பி உள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட போயிங் 787, 737 ட்ரீம்லைனர் விமானங்களின் இன்ஜின் எரிபொருள் சுவிட்சுகளை கட்டாயமாக ஆய்வு செய்ய வேண்டும் என அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் இந்த ஆய்வை முடித்துவிட்டது. இதனைத்தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில், போயிங் 787 மற்றும் போயிங் 787 விமானத்தில் எரிபொருள் கட்டுப்பாட்டு அமைப்புகளில் நடந்த சோதனை எந்த பிரச்னையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா, நீண்ட தூர பயணங்களுக்கு 787 போயிங் ஜெட் விமானங்களை பயன்படுத்துகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், போயில் 737 ஜெட் விமானங்களையும் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us