sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காங்கிரசுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை; அறிவித்தார் கெஜ்ரிவால்

/

காங்கிரசுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை; அறிவித்தார் கெஜ்ரிவால்

காங்கிரசுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை; அறிவித்தார் கெஜ்ரிவால்

காங்கிரசுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை; அறிவித்தார் கெஜ்ரிவால்

8


ADDED : டிச 11, 2024 11:17 AM

Google News

ADDED : டிச 11, 2024 11:17 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. 70 சட்டசபை தொகுதிகளுடைய இங்கு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடக்கிறது. முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆளும் ஆத் ஆத்மி, தற்போதே தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில், எதிர்க்கட்சியான பா.ஜ.,வும் முனைப்பு காட்டி வருகிறது. இந்த சூழலில், டில்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணிக்கான இறுதிக்கட்ட ஒப்பந்தத்தில் உள்ளன. காங்கிரசுக்கு 15 இடங்களும், மற்ற இண்டியா கூட்டணி கட்சியினருக்கு 1 அல்லது 2 இடங்களும், மற்றவை ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடும் என தகவல் பரவியது.

இந்த தகவலை ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மறுத்துள்ளார். அவரது அறிக்கை: டில்லியில் ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த பலத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது. காங்கிரசுடன் கூட்டணி அமைய வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us