ADDED : அக் 04, 2011 11:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர் : காஷ்மீர் மாநில நிதி அமைச்சர் அப்துல் ரகீம் ரதோர் கூறியதாவது: ஆளும், தேசிய மாநாட்டு கட்சி நிர்வாகி செய்யது முகமது யூசுப் என்பவர், அனந்தநாக் மாவட்டத்தில், போலீஸ் காவலில் இருந்தபோது, உயிரிழந்துள்ளார்.
இந்த விஷயத்திற்காக, முதல்வர் ஒமர் அப்துல்லா, ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், சட்டசபையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்போவதாகவும், எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. இந்த இறப்பு சம்பவம் தொடர்பாக, நீதி விசாரணை நடத்த, மாநில அரசு சார்பில் ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, இதற்காக, ஒமர் அப்துல்லா, தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் எதுவும் ஏற்படவில்லை, என்றார்.

