sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

"சிலர் சிறையிலும், சிலர் ஜாமினிலும் உள்ளனர்"- அனுராக் தாக்கூர் சாடல்

/

"சிலர் சிறையிலும், சிலர் ஜாமினிலும் உள்ளனர்"- அனுராக் தாக்கூர் சாடல்

"சிலர் சிறையிலும், சிலர் ஜாமினிலும் உள்ளனர்"- அனுராக் தாக்கூர் சாடல்

"சிலர் சிறையிலும், சிலர் ஜாமினிலும் உள்ளனர்"- அனுராக் தாக்கூர் சாடல்

2


ADDED : மே 19, 2024 12:00 PM

Google News

ADDED : மே 19, 2024 12:00 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'ஊழல் செய்தவர்கள் நீதிமன்றம் மற்றும் அமலாக்கத்துறை, என்.ஐ.ஏ., உள்ளிட்ட விசாரணை அமைப்புகளுக்கு எதிராக செயல்பட்டதால், சிலர் சிறையிலும், சிலர் ஜாமினிலும் உள்ளனர்' என மத்திய அமைச்சரும், ஹமிர்பூர் தொகுதி பா.ஜ., வேட்பாளருமான அனுராக் தாக்கூர் கூறினார்.

இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 4 நாட்களுக்கு முன் ஆம் ஆத்மி கட்சியின் பெண் எம்.பி., ஸ்வாதி மாலிவால் முதல்வர் இல்லத்தில் வைத்து தாக்கப்பட்டார். 2 நாட்களுக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சியின் மற்றொரு அமைச்சர், தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக சுவாதி மாலிவால் புகார் கூறியுள்ளார். ஊழல் செய்தவர்கள் நீதிமன்றம் மற்றும் அமாலாக்கத்துறை, என்.ஐ.ஏ., உள்ளிட்ட விசாரணை அமைப்புகளுக்கு எதிராக செயல்பட்டதால், சிலர் சிறையிலும், சிலர் ஜாமினிலும் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வியும்...! பதிலும்...!

தெற்கு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடந்திய தாக்குதலில் பா.ஜ., நிர்வாகி அகமது ஷேக் காயமடைந்து, சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இது குறித்து நிருபர்கள் கேள்விக்கு, ''ஜம்மு காஷ்மீர் மக்கள் இனி பிரிவினைவாதம், பயங்கரவாதம், கல்வீச்சு போன்றவற்றை ஆதரிக்க மாட்டார்கள் என்பதை தாக்குதலில் ஈடுபடுவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற செயல்களை யார் செய்தாலும், அவர்களுக்கு கடுமையாக பதிலடி கொடுக்கப்படும். காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது'' என அனுராக் தாக்கூர் பதில் அளித்தார்.






      Dinamalar
      Follow us