sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

"பொய் குற்றச்சாட்டுகளை பரப்புவதை நிறுத்துங்கள்": பா.ஜ., "அட்வைஸ்"

/

"பொய் குற்றச்சாட்டுகளை பரப்புவதை நிறுத்துங்கள்": பா.ஜ., "அட்வைஸ்"

"பொய் குற்றச்சாட்டுகளை பரப்புவதை நிறுத்துங்கள்": பா.ஜ., "அட்வைஸ்"

"பொய் குற்றச்சாட்டுகளை பரப்புவதை நிறுத்துங்கள்": பா.ஜ., "அட்வைஸ்"


ADDED : மார் 13, 2024 02:24 PM

Google News

ADDED : மார் 13, 2024 02:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'பதற்றத்தை உருவாக்கி பொய் குற்றச்சாட்டுகளை பரப்புவதை நிறுத்துங்கள்' என பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இது குறித்து டில்லியில் ரவி சங்கர் பிரசாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எந்த இந்தியர்களின் குடியுரிமையையும் குடியுரிமை திருத்தச் சட்டம் பறிக்கவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் இந்திய குடிமக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பெயரில் வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கி பொய் குற்றச்சாட்டுகளை பரப்புவதை நிறுத்துங்கள். குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த மாநில கட்சிகள் நிறுத்த வேண்டும்.

மேற்குவங்கத்தில் பொய் குற்றச்சாட்டுக்களை மம்தா பானர்ஜி பரப்புகிறார். நாங்கள் அதை வன்மையாகக் கண்டிக்கிறோம். எந்த அளவிற்கு அவர் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். துன்புறுத்தப் படுபவர்களுக்கு மட்டுமே குடியுரிமை அளிக்கிறது. யாருடைய வேலையோ குடியுரிமையோ பறிக்கப்படாது என்பதை நாங்கள் தெளிவாகக் கூறுகிறோம்.

வாக்கு வங்கி அரசியலுக்காக கெஜ்ரிவால் பேசி வருகிறார். குடியுரிமை திருத்தச் சட்டம் வெற்றி பெற்றதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவாக சொல்லி வருகிறார். இந்திய முஸ்லீம்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அரசு கூறியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஏன் அவதூறு பரப்புகின்றன?. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us