sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

"இது தான் ஒரு தேசத்தின் கவுரவம்": மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு ரஷ்ய அமைச்சர் பாராட்டு

/

"இது தான் ஒரு தேசத்தின் கவுரவம்": மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு ரஷ்ய அமைச்சர் பாராட்டு

"இது தான் ஒரு தேசத்தின் கவுரவம்": மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு ரஷ்ய அமைச்சர் பாராட்டு

"இது தான் ஒரு தேசத்தின் கவுரவம்": மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு ரஷ்ய அமைச்சர் பாராட்டு


ADDED : மார் 05, 2024 01:44 PM

Google News

ADDED : மார் 05, 2024 01:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: '' ஐ.நா., விவாதத்தில் எங்களிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது பற்றி, கேட்ட கேள்விக்கு, உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என எனது நண்பரான இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறி விட்டார். இது தான் ஒரு தேசத்தின் கவுரவம்'' என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் பாராட்டி உள்ளார்.

ஐ.நா.வில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து எழுப்பிய கேள்விக்கு, ''ரஷ்யாவிடமிருந்து நாங்கள் கச்சா எண்ணெய் வாங்குகிறோம். நிறைய வாய்ப்புகளை உருவாக்க எங்களிடம் திறமை இருக்கும்போது அதற்காக நீங்கள் எங்களை பாராட்ட வேண்டுமே தவிர விமர்சிக்கக்கூடாது. உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்'' என ஜெய்சங்கர் பதில் அளித்தார்.

ஜெய்சங்கரை புகழ்ந்த ரஷ்ய அமைச்சர்!

இது குறித்து, ரஷ்யாவில் உலக இளைஞர் மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் பேசியதாவது: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது பற்றி, என் நண்பரான இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கரிடம், ஐ.நா., விவாதத்தில் மேற்கத்திய நாட்டினர் கேட்டனர்.

அதற்கு அவர், 'நீங்கள் எவ்வளவு கச்சா எண்ணெய் ரஷ்யாவிடம் இருந்து வாங்கினீர்கள், வாங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரியும். எனவே உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்' என்று கூறி விட்டார். இது தான் ஒரு தேசத்தின் கவுரவம். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us