sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

"தே.ஜ., கூட்டணி 400க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும்": அடித்து சொல்கிறார் அமித்ஷா

/

"தே.ஜ., கூட்டணி 400க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும்": அடித்து சொல்கிறார் அமித்ஷா

"தே.ஜ., கூட்டணி 400க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும்": அடித்து சொல்கிறார் அமித்ஷா

"தே.ஜ., கூட்டணி 400க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும்": அடித்து சொல்கிறார் அமித்ஷா

10


UPDATED : பிப் 10, 2024 01:58 PM

ADDED : பிப் 10, 2024 12:46 PM

Google News

UPDATED : பிப் 10, 2024 01:58 PM ADDED : பிப் 10, 2024 12:46 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

இது குறித்து அமித்ஷா கூறியதாவது: லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து எந்த சந்தேகமும் இல்லை. பார்லிமென்டில் மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் தான் அமரப் போகிறோம் என்பதை காங்கிரஸ் உணர்ந்துள்ளது. இது காங்கிரசின் கூட்டணி கட்சிகளுக்கும் தெரியும். வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும். இந்திய பிரிவினைக்கு காரணமான காங்கிரசை சேர்ந்த ராகுலுக்கு நீதி யாத்திரை செல்ல எந்த உரிமையும் இல்லை.

370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததால், மக்கள் பா.ஜ.,வுக்கு 370 தொகுதிகளில் வெற்றியை கொடுத்து ஆசீர்வதிப்பார்கள். காங்கிரஸ் ஆட்சியின் போது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ராமர் கோவில் கட்ட அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறு அமித்ஷா கூறினார்.

குடியுரிமை திருத்தச் சட்டம்

இது குறித்து தனியார் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு அமித்ஷா பேசியதாவது: லோக்சபா தேர்தலுக்கு முன்பு குடியுரிமை திருத்தச் சட்டம்(சி.ஏ.ஏ.,) நடைமுறைப்படுத்தப்படும். விரைவில் அறிவிப்பாணை வெளியிடப்படும்.
யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கான சட்டம் அல்ல, குடியுரிமை திருத்தச் சட்டம். ஜனசங்கம் காலம் முதலே பொது சிவில் சட்டம் பா.ஜ.,வின் கொள்கை - அது இந்திய அரசியல் சாசனத்தின் கொள்கையும் ஆகும். மதச்சார்பற்ற ஒரு நாட்டில் மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் இருக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.








      Dinamalar
      Follow us