ADDED : மார் 02, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் 37 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு, தேவனஹள்ளியின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், நேற்று காலை ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவர் வந்திறங்கினார். இவரை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அவர் வைத்திருந்த லக்கேஜில், தங்கம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 37 லட்ச ரூபாய் மதிப்புள்ள, 611 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். பயணியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

