sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி; கேரளாவில் மின்கசிவால் பரிதாபம்

/

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி; கேரளாவில் மின்கசிவால் பரிதாபம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி; கேரளாவில் மின்கசிவால் பரிதாபம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி; கேரளாவில் மின்கசிவால் பரிதாபம்


ADDED : மே 12, 2025 12:37 AM

Google News

ADDED : மே 12, 2025 12:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : கேரளா இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே கொன்னத்தடி ஊராட்சி பணிக்கன்குடி கொம்பொடிஞ்சால் பகுதியில் வீட்டிற்குள் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உடல் கருகி பலியாயினர்.

அப்பகுதியைச் சேர்ந்த டாக்சி டிரைவர் அனீஷ். இவர் கொரோனா பாதிப்பால் 3 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். அவரது மனைவி சுபா 44, மகன்கள் அபிநந்த் 10, அபினவ் 4, சுபாவின் தாயார் பொன்னம்மா 70, அங்கு வசித்தனர்.

இந்நிலையில் சுபாவின் வீடு தீக்கிரையான நிலையில் நேற்று முன்தினம் மாலை 6:30க்கு சிலர் பார்த்தனர்.

வீட்டிற்குள் சென்ற போது சிறுவன் அபிநவ் பலத்த தீக்காயங்களுடன் கிடந்தான். அடிமாலி தாலுகா மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் அபிநவ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற மூன்று பேரின் உடல்களும் கருகிய நிலையில் நேற்று மீட்கப்பட்டன.

இடுக்கி தடயவியல்துறையினர் நேற்று சம்பவ இடத்தில் சோதனையிட்டனர். அதில் மின் கசிவு மூலம் மே 9 இரவில் தீப்பற்றியதாக முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. மோப்ப நாய் மூலம் சோதனை நடந்தது.

கொம்பொடிஞ்சால் பகுதியில் மலை மீது வீடு தனியாக உள்ளதால் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் உடனடியாக வெளியுலகிற்கு தெரியாமல் தாமதமாக நேற்று முன்தினம் மாலை தான் தெரியவந்தது. வெள்ளத்துாவல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us