sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் 44 காலியிடங்கள்: பட்டதாரி, சி.ஏ., முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்!

/

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் 44 காலியிடங்கள்: பட்டதாரி, சி.ஏ., முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் 44 காலியிடங்கள்: பட்டதாரி, சி.ஏ., முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் 44 காலியிடங்கள்: பட்டதாரி, சி.ஏ., முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்!


ADDED : அக் 08, 2024 07:23 AM

Google News

ADDED : அக் 08, 2024 07:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (எச்.ஏ.எல்.,) நிறுவனத்தில் காலியாக உள்ள 44 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 30.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (எச்.ஏ.எல்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துணை பொது மேலாளர்-1 ,

மேலாளர்- 29 ,

நிதி அதிகாரி- 9 ,

அதிகாரி- 3,

தீயணைப்பு அதிகாரி- 2,

கல்வி தகுதி என்ன?


துணை பொது மேலாளர் பணியிடங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலாளர், அதிகாரி, தீயணைப்புத்துறை அதிகாரி பணியிடங்களுக்கு பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நிதி அதிகாரி பணியிடங்களுக்கு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சி. ஏ., முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 47 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்வது எப்படி?முன் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே பணிக்கான நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.நேர்காணலில், செயல்திறன் அடிப்படையில் விண்ணப்பதாரார்கள் தேர்வு செய்யப் படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.hal-india.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக அக்டோபர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் ரூ.500. எஸ்.சி., எஸ்.டி., மற்றும் PwBD பிரிவினருக்குகட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us