sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கோழிக்கோட்டில் ரூ.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் அதிரடி நடவடிக்கை

/

கோழிக்கோட்டில் ரூ.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் அதிரடி நடவடிக்கை

கோழிக்கோட்டில் ரூ.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் அதிரடி நடவடிக்கை

கோழிக்கோட்டில் ரூ.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் அதிரடி நடவடிக்கை

11


ADDED : மே 04, 2025 10:02 AM

Google News

ADDED : மே 04, 2025 10:02 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கேரளாவில் ஆவணமின்றி பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கொடுவள்ளி என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த காரை போலீசார் வழி மறித்தனர்.

அப்போது காரில் இருந்த இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதை அடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் காரில் ரகசிய அறை அமைத்து, ரூ.5 கோடி பணம் கட்டுக் கட்டாக அடுக்கி வைத்து கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஹவாலா பணம் என்பது விசாரணையில் தெரியவந்தது.

காரில் ரகசிய அறை அமைத்து ஹவாலா பணத்தை கடத்திய 2 பேரைப் பிடித்து கேரள போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்த ரூ.5 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us