sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜார்க்கண்டில் தொடரும் நக்சல் வேட்டை: 5 பதுங்கு குழிகள் தகர்த்து அழிப்பு

/

ஜார்க்கண்டில் தொடரும் நக்சல் வேட்டை: 5 பதுங்கு குழிகள் தகர்த்து அழிப்பு

ஜார்க்கண்டில் தொடரும் நக்சல் வேட்டை: 5 பதுங்கு குழிகள் தகர்த்து அழிப்பு

ஜார்க்கண்டில் தொடரும் நக்சல் வேட்டை: 5 பதுங்கு குழிகள் தகர்த்து அழிப்பு


ADDED : ஜூலை 12, 2025 01:23 PM

Google News

ADDED : ஜூலை 12, 2025 01:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாய்பாசா: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சல்கள் ஒழிப்பு வேட்டையின் போது 5 பதுங்கு குழிகளை பாதுகாப்பு படையினர் அழித்தனர்.

ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட வட மாநிலங்களை நக்சல்கள் இல்லாத பிரதேசமாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் பாதுகாப்பு படையினர் தினமும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பல லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்ட நக்சல்கள், பாதுகாப்பு படையினரின் தீவிர வேட்டையால் சரண் அடைந்து வருகின்றனர்.

இந் நிலையில், ஜார்க்கண்ட் சோட்டாநகரா பகுதிகளில் நக்சல்கள் பதுங்கி அதி பயங்கர நாசவேலைகளில் ஈடுபட ஆயத்தமாகி வருவதாக உளவுத்துறை மூலம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாநில போலீசாரும், நக்சல் ஒழிப்பு பிரிவினரும் ஒன்றிணைந்து அடர்ந்த காடுகளில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

உளவுத்துறை அனுப்பிய தகவலை மையமாக கொண்டு மேற்கு சிங்பும் மாவட்டத்தில் கூட்டு பாதுகாப்புப் படையினர் நக்சல்களை தேடினர். அப்போது நக்சல்களின் 5 பதுங்கு குழிகளை கண்டறிந்தனர். மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த ஏராளமான வெடிபொருட்களையும், 2 குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டுகளையும் கைப்பற்றினர்.

இதுகுறித்து எஸ்.பி., ராகேஷ் ரஞ்சன் செய்திக்குறிப்பு ஒன்றில் கூறி இருப்பதாவது;

நக்சல்கள் ஒழிப்பு வேட்டையை துரிதப்படுத்தி வருகிறோம். தேடுதல் வேட்டையின் ஒரு பகுதியாக நக்சல்களில் 5 பதுங்கு குழிகளை கண்டறிந்து அழித்துவிட்டோம். 2 குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டுகளை கைப்பற்றி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us