sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

2025ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது; பந்தயத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 5 பேர்!

/

2025ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது; பந்தயத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 5 பேர்!

2025ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது; பந்தயத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 5 பேர்!

2025ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது; பந்தயத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 5 பேர்!

1


UPDATED : டிச 04, 2024 03:49 PM

ADDED : டிச 04, 2024 10:24 AM

Google News

UPDATED : டிச 04, 2024 03:49 PM ADDED : டிச 04, 2024 10:24 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: சிறந்த பாடல் மற்றும் சிறந்த இசை ஆகிய பிரிவுகளில், மேற்கு வங்கத்தை சேர்ந்த இசையமைப்பாளர்கள் உட்பட ஐந்து பேர், 2025ம் ஆண்டு ஆஸ்கர் விருது போட்டியில் உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் வெளியான சிறப்பான படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் மிகவும் பிரபலம். திரையுலகில் இருக்கும் அனைவருக்குமே இந்த விருதை பெறுவது தான் கனவாக இருக்கும். இந்தியாவில் இந்த விருதை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ரசூல் பூக்குட்டி, பாடலாசிரியர் குல்ஸார் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்தாண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன.

போட்டியில் இருக்கும் படங்கள், பாடல்கள், ஆவணப்படங்கள் உள்ளிட்டவை பற்றிய விவரம் வெளியாகி வருகிறது. சிறந்த பாடலுக்காக ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடும் 89 பாடல்களில் 'பேண்ட் ஆப் மஹாராஜாஸ்' படத்தின் இரண்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தப் பாடல்களை பாடிய மற்றும் இசையமைத்த மேற்கு வங்கத்தை சேர்ந்த சயான் கங்குலி, இமான் சக்ரவர்த்தி, பண்டிட் பிக்ரம் கோஷ், ஷமீக் குண்டு மற்றும் தாலியா மைதி பா ஆகிய ஐந்து பேர் போட்டியில் உள்ளனர்.

டிசம்பர் 9ம் தேதி தொடங்கும் முதல் சுற்று வாக்கெடுப்பின் போது 15 பாடல்கள் தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்பட்ட பாடல்கள் விவரம் டிசம்பர் 17ம் தேதி அறிவிக்கப்படும். இது குறித்து பாடகர் பிக்ரம் கோஷ் கூறியதாவது; என்னுடைய ஒரு பஞ்சாபி பாடல், படம் ஆஸ்கர் விருது போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது ஒரு மரியாதைக்குரிய விஷயம் என்றார்.

ஆடு ஜீவிதம் படம்

* சிறந்த பின்னணி இசை மற்றும் பாடலுக்கான ஆஸ்கர் விருது முதற்கட்ட தேர்வு பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஆடு ஜீவிதம் படம் இடம்பிடித்துள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள படங்கள் வாக்கெடுப்பு மூலம் அடுத்த கட்டத்திற்குத் தேர்வாக உள்ளன.






      Dinamalar
      Follow us