sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

லாரியில் கார் மோதி கோர விபத்து ஓசூரை சேர்ந்தவர் உட்பட 5 பேர் பலி

/

லாரியில் கார் மோதி கோர விபத்து ஓசூரை சேர்ந்தவர் உட்பட 5 பேர் பலி

லாரியில் கார் மோதி கோர விபத்து ஓசூரை சேர்ந்தவர் உட்பட 5 பேர் பலி

லாரியில் கார் மோதி கோர விபத்து ஓசூரை சேர்ந்தவர் உட்பட 5 பேர் பலி

1


ADDED : ஏப் 29, 2025 06:56 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 06:56 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பதி: திருப்பதிக்கு சென்று காரில் திரும்பிய போது, கன்டெய்னர் லாரியில் கார் மோதிய விபத்தில், ஓசூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் உட்பட ஐந்து பேர் பலியாகினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் விகாஸ் நகர் அருகே எம்.எஸ்., கார்டன் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன், 42; தனியார் நிறுவன ஊழியர்.

இவர் தன் மகன் கிருஷ்வின், 15, பெங்களூரைச் சேர்ந்த உறவினர்களான விஜயலட்சுமி, 50, அதே பகுதியை சேர்ந்த சஹானா, 34, ரஜினி, 27, ரங்கேகவுடா மகன் லெகன்கவுடா, 11, கீதாம்மா, 51, ஆகியோருடன் திருப்பதி கோவிலுக்கு சென்றார்.

அங்கு தரிசனம் செய்து விட்டு, நேற்று மீண்டும் ஊருக்கு மாருதி சுசூகி எர்டிகா காரில் திரும்பினர்.

தியாகராஜன் காரை ஓட்டினார். திருப்பதி - சித்துார் தேசிய நெடுஞ்சாலையில், பாகலா அருகே, தோட்டப்பள்ளி பகுதியில் நேற்று மதியம், 2:00 மணிக்கு சென்றபோது, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியின் பின்புறம் கார் மோதியது.

இதில், காரின் முன்பகுதி நொறுங்கியது. காரில் பயணம் செய்த தியாகராஜன், விஜயலட்சுமி, சஹானா, ரஜினி, சிறுவன் லெகன்கவுடா ஆகிய ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கீதாம்மா மற்றும் தியாகராஜன் மகன் கிருஷ்வின் ஆகிய இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இச்சம்பவம் குறித்து பாகலா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us