sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பரிதவித்த 57 பேர்; பத்திரமாக மீட்டது கடலோரக் காவல் படை!

/

லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பரிதவித்த 57 பேர்; பத்திரமாக மீட்டது கடலோரக் காவல் படை!

லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பரிதவித்த 57 பேர்; பத்திரமாக மீட்டது கடலோரக் காவல் படை!

லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பரிதவித்த 57 பேர்; பத்திரமாக மீட்டது கடலோரக் காவல் படை!

4


ADDED : ஜன 16, 2025 07:01 AM

Google News

ADDED : ஜன 16, 2025 07:01 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: லட்சத்தீவு கவரட்டி அருகே இந்தியப் பெருங்கடலில் படகில் சிக்கித் தவித்த 57 பேரை இந்திய கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.

ஜனவரி 14ம் தேதி நள்ளிரவு 12:15 மணியளவில் கவரட்டியில் இருந்து சுஹேலிபர் தீவுக்கு, மூன்று பணியாளர்கள், பயணிகள் 54 பேர் என மொத்தம் 57 பேரை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று புறப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி படகு சென்று சேரவில்லை. படகு பழுதானதால், உரிய இடம் செல்ல முடியாமல் நடுக்கடலில் தவித்தனர்.

இந்த நிலையில், கடலோர காவல்படைக்கு லட்சத்தீவு நிர்வாகத்திடம் இருந்து மொத்தம் 57 பேர் இருந்த படகு காணாமல் போனதாக ஒரு பேரிடர் அழைப்பு வந்தது. கடலோர காவல்படை குழுவினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, கவரட்டி அருகே இந்தியப் பெருங்கடலில் பழுதான படகில் இருந்த 57 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட பயணிகளில் 22 பெண்கள், 9 ஆண்கள், 3 கைக்குழந்தைகள் மற்றும் 20 குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியப் பெருங்கடலில் உள்ள சுஹெலிபார் தீவு அருகே சென்றபோது படகு பழுதானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us