ADDED : அக் 13, 2025 01:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சண்டிகர்:தாதா பாம்பிஹா கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு, ஆறு கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து, பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது:
குண்டர் தடுப்புப் படை மற்றும் பர்னாலா போலீசார் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், தாதா பாம்பிஹா கும்பலைச் சேர்ந்த சந்தீப் சிங் மற்றும் சேகர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ஆறு கைத்துப்பாக்கிகள் மற்றும் 19 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பஞ்சாபில், சிலரை சுட்டுக் கொல்ல பாம்பிஹா கும்பலைச் சேர்ந்த ரவுடிகளுக்கு இந்தத் துப்பாக்கிகளை வழங்க இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மற்ற கூட்டாளிகளைப் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.