ADDED : ஆக 16, 2025 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லியில் உள்ள ஹுமாயூன் கல்லறை வளாகத்தில், தர்காவின் கூரை இடிந்து விழுந்து ஆறு பேர் பலியாகினர்.
தலைநகர் டில்லி நிஜாமுதினில் முகலாய அரசர் ஹுமாயூன் கல்லறை உள்ளது. 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த இந்த கட்டட வளாகத்தில் ஷரீப் பாட்டே ஷா தர்கா உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் உள்ளன. 30 ஆண்டு பழமையான இந்த தர்காவில் நேற்று மாலை தொழுகை நடந்தது. அப்போது, தர்கா கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் ஆறு பேர் பலியாகினர். இடிபாடுகளில் சிக்கிய ௧0க்கும் மேற்பட்டோரை மீட்பு படையினர் மீட்டனர்.