உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : ஜூன் 17, 2026 07:12 PM
ADDED : ஜூன் 17, 2026 05:52 PM

அ நிறம் | அளவு
வதோதரா:குஜராத்தில், நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது அதிவேகமாக வந்த தனியார் பஸ் மோதியதில், பஸ்சில் பயணித்த ஆறு பயணியர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தானில் இருந்து குஜராத்தின் சூரத் நோக்கி தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. 25க்கும் மேற்பட்டோர் பயணித்த அந்த பஸ் வதோதரா - ஹலோல் நெடுஞ்சாலையில் உள்ள கொடாம்பி கிராமம் அருகே அதிகாலை 4:00 மணிக்கு சென்றது.
அப்போது, சாலையில் நின்றிருந்த லாரியின் பின்னால் அந்த பஸ் அதிவேகமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி முற்றிலுமாக நொறுங்கியது.
இந்த விபத்தில், பஸ்சில் இருந்த ஆறு பயணியர் உயிரிழந்தனர்; 20 பேர் காயமடைந்தனர். போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
