sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி 6 பெண்கள் பலி

/

தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி 6 பெண்கள் பலி

தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி 6 பெண்கள் பலி

தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி 6 பெண்கள் பலி

2


ADDED : நவ 06, 2025 06:51 AM

Google News

ADDED : நவ 06, 2025 06:51 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மிர்சாபூர்: உத்தர பிரதேசத்தின் மிர்சாபூரில், தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதிய வி பத்தில் இரு சிறுமியர் உட்பட ஆறு பெண்கள் பலியாகினர்.

உத்தர பிரதேசத்தில் உள்ள சோபன் நகரில் இருந்து பிரயாக்ராஜுக்கு, சோபன் - பிரயாக் ராஜ் எக்ஸ்பிரஸ் சென்று நேற்று காலை கொண்டிருந்தது. வழியில், மிர்சாபூரில் உள்ள சூனார் ஜங்ஷனில் பயணியர் இறங்கினர்.

அவர்களில் சிலர் பிளாட்பாரத்தில் இறங்காமல் தண்டவாளத்தில் இறங்கி, எதிரே உள்ள பிளாட்பாரத்துக்கு வேகமாக சென்றனர். அப்போது அந்த தண்டவாளத்தில் அதிவேகமாக வந்த ஹவுரா - கல்கா நேதாஜி எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் இரு சிறுமியர், நான்கு பெண்கள் என ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'ரயில் வருவதை அறிந்த ஆண்கள் வேகமாக ஓடி பிளாட்பாரத்தில் ஏறி உயிர் தப்பினர். பெண்கள் பிளாட்பாரத்தில் ஏற முடியாததால் விபத்தில் சிக்கினர். இதனால், தண்டவாளத்தில் ரத்தமும் சதையுமாக உடல்பாகங்கள் சிதறிக்கிடந்தன. உயிரிழந்தவர்கள் சவீதா, 28, சாதனா, 16, சிவகுமாரி, 12, அஞ்சு தேவி, 20, சுசிலா தேவி, 60, கலாவதி, 50, என அடையாளம் காணப் பட்டுள்ளது' என்றனர். உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக தலா, 2 லட்சம் ரூபாய் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us